5. சன்மார்க்க போதினி (1867)

5. சன்மார்க்க போதினி (1867): ஆபால விருத்தர்கள் வரையில் யாவர்க்கும் பயில்விக்கும் சன்மார்க்க போதினி என்கிற சாஸ்திர பாடசாலை யொன்று நியமிக்கப்படும். பார்வதிபுரம்பிரபவ வருடம் மாதம் உதமிழ் ஆரியம் இங்கிலீஷ் சன்மார்க்க போதினி.... சாலையில் உபய கலாநிதிப் பெரும்புலவர் தொ. வேலாயுத முதலியார் முதலிய அறிஞர்களால்..... ***************

11. சபை விளம்பரம் (25 - 1 - 1872)

உ திருச்சிற்றம்பலம் உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே! அறிவு வந்த கால முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும், அடைந்து அறியாத அற்புத குணங்களையும், கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும், செய்து அறியாத அற்புதச் செயல்களையும், கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும், அனுபவித் தறியாத அற்புத அனுபவங்களையும், இது தருணங் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேன் என்றுணருகின்ற ஓர் சத்திய வுணர்ச்சியாற் பெருங்களிப்புடையேனாகி இருக்கின்றேன். நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்ப

6. சன்மார்க்க சங்கம் விளங்கும் காலம் (27 - 4 - 1870)

6. சன்மார்க்க சங்கம் விளங்கும் காலம் (27 - 4 - 1870) உ திருச்சிற்றம்பலம் இஃது தூற்றாமல் வைக்க சமரச வேத சன்மார்க்க சங்கம் கூடி விளங்கும் காலம் எது? அது நமக்கு அறிவு வந்த நாள்தொட்டு அந்நாள் பரியந்தம் இறந்து போன நமது சினேகர், உறவினர், அடுத்தோர், வார்த்திபர், வாலிபர், பாலியர், குமாரர், ஆண்மக்கள், பெண்மக்கள் என்பவர் எல்லாம் உயிர்பெற்று எழுந்து மேற்குறித்த சங்கத்தில் கூடி விளங்கும் காலமாகும்.

18. சன்மார்க்க சங்கத்தார்க்கு இட்ட இறுதிக் கட்டளை - 30 - 1 - 1874

18. சன்மார்க்க சங்கத்தார்க்கு இட்ட இறுதிக் கட்டளை 30 - 1 - 1874 ஸ்ரீமுக வருடம் தை மாதம் ** "நான் உள்ளெ பத்துப் பதினைந்து தின மிருக்கப்போகிறேன். பார்த்து அவநம்பிக்கை யடையாதீர்கள். ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தா னிருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக்கொடார்." அழைப்புகள், அறிவிப்புகள், கட்டளைகள் முற்றுப்பெற்றன. * * *

7. அன்பர்களுக்கு இட்ட சாலைக் கட்டளை - 26 - 10 - 1870

7. அன்பர்களுக்கு இட்ட சாலைக் கட்டளை 26 - 10 - 1870 உ திருச்சிற்றம்பலம் அன்புள்ள நம்மவர்களுக்கு அன்புடனறிவிப்பது. ஒருவனைப் பற்றி அனந்தம் பேர்களுக்கு நன்மையுண்டாம் என்பதை உண்மையாக நம்பியிருங்கள் என்னா லுங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம். நான் இன்னுங் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுகின்றேன். அது பரியந்தம் பொறுத்திருங்கள். நான் மிகவும் சமீபத்தில்தானே வெளிப்படுவேன். அஞ்சவேண்டாம். சாலையை லகுவாய் நடத்துங்கள். திருச்சிற்றம்பலம்

15. சன்மார்க்க சங்கத்தார் பழக்க விதி 25 - 11 - 1872

சித்திவளாகத்திலும் தருமச்சாலையிலும் வசிப்பவர்கள் பரஸ்பரம் பழகுவதற்கு எச்சரிப்புப் பத்திரிகை ஆங்கிரச வருடம் கார்த்திகை மாதம் 12ஆம் நாள், ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்றும், அவர் பொதுப்பட உலகத்தி லுள்ளார் யாவரும் சன்மார்க்கப் பெரும்பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற் பொருட்டு வெளிப்படக் காரியப்படுகின்றனர் என்றும், அதுகாலையில் நாமும் ஆன்மலாபத்தைப் பெற்றுக்கொள்ளுவோம் எனவும் நம்பி இங்கே வசிக்கும் யாவரும் வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல் அவசியம். அன்றியும் கால பேதத்தால் அல்லது மற்றவகையா

16. சித்திவளாக விளம்பரம் 8 - 9 - 1873

16. சித்திவளாக விளம்பரம் 8 - 9 - 1873 உ திருச்சிற்றம்பலம் உலக அறிவிப்புப் பத்திரிகை! ஞானசித்திபுர மென்றும் உத்தரஞானசிதம்பர மென்றும் பிரமாணிக்கப்படுகின்ற வடலூர் சத்தியஞானசபைக்கு முக்கிய சம்பந்தமுடையதாகி அடுத்த கருங்குழி யெல்லை மேட்டுக்குப்பத்தில் வழிபடப்படுகின்ற சித்திவளாகத்தில் வந்திருக்கின்றவர்களும், வருகின்றவர்களும், வருபவர்களுமாகிய ஜனங்களுக்கு அறிவிப்பது. மேற்குறித்த விடத்தில் இந்த மாதத்திற் கடுத்த புரட்டாசி மாதம் ஐந்தாம் தேதியில் அற்புத விளக்கம் நேரிடுவதாக ஓர் வதந்தி வழங்கப்படுகின்றது. அது கேள

4. சன்மார்க்க விவேக விருத்தி (1867)

உ சற்குரவே நம: சன்மார்க்க விவேக விருத்தி விளம்பரம்: அறிவுடைய நண்பர்க்கு அன்பொடு வந்தனஞ் செய்து அறிவிக்கை, நண்பர்களே! உலகில் வழங்கும் பிறப்புகளுள் உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்ட நாமனைவரும் அறம் பொருள் இன்பம் வீடு

8. சாலை சம்பந்திகளுக்கு இட்ட சமாதிக் கட்டளை 30 - 3 - 1871

8. சாலை சம்பந்திகளுக்கு இட்ட சமாதிக் கட்டளை 30 - 3 - 1871 உ திருச்சிற்றம்பலம் அன்புள்ள நீங்கள் சமரச வேத சன்மார்க்க சங்கத் தருமச்சாலைக்கு மிகவும் உரிமையுடையீர்க ளாகலில் உங்களுக்கு உண்மையுடன் அறிவிப்பது. நீங்களும் உங்களை அடுத்தவர்களும் சிற்றம்பலத் தந்தையார் திருவருளாற் சுகமாக வாழ்வீர்களாக.

9. சன்மார்க்கப் பெரும்பதி வருகை (12 - 4 - 1871)

உ திருச்சிற்றம்பலம் சுவாமிகளுக்குத் தெரிவிப்பது சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன்மேலும் அதன்மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமய பேதங்களும், சாத்திரபேதங்களும், ஜாதிபேதங்களும், ஆசாரபேதங்களும் போய், சுத்தசன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம். இது 26மாதத்திற்கு மேல். இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச்

2. ஜீவகாருண்ய ஒழுக்க விளம்பரம்:

உ திருச்சிற்றம்பலம் ஜீவகாருண்ய ஒழுக்க விளம்பரம்: கல்வி கேள்விகளாற் பகுத்தறியத் தக்க அறிவையுடைய உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்க ளனைவர்க்கும் வந்நதனஞ் செய்தறிவிக்கை. உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்களிந்தப் பிறப்பினா லடையத் தக்க பிரயோசனத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும். அந்தப் பிரயோசனம் யாதோ வெனில்: எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லாச் செயல்களையும், எல்லாப் பயன்களையும் தமது பரிபூரண இயற்கைவிளக்கமாகிய அரு

1. சாலைத் தொடக்கவிழா அழைப்பு:

(1) உ கடவுள் துணை சாந்த சித்தமுடைய சாமியவர்களுக்கு வந்தனம்.1 சிதம்பர தலத்துக்குச் சுமார் இருகாத வழிநடை யெல்லையில் கூடலூரைச் சார்ந்த வடலூ ரென்றும் பார்வதிபுரமென்றும் வழங்கப்படுகின்ற ஊருக்கு வடபுரத்தில் சென்ன நகரிலிருந்து கும்பகோணத்திற்குப் போகின்ற பெரிய பாட்டை 125வது மயிலில் மஞ்சக் குப்பத்திலிருந்து விருத்தாசலம் போகின்ற பாட்டை 23ஆவது மயிலில் பிரபவ வருடம் வைகாசி மாதம் 11ஆம் நாள்2 குரு வாரம் உதயகாலம் சிங்கலக்கினத்தில் சமரச வேத தருமச்சாலையின் செங்கற் கட்டடங்களுக்கு அஸ்தி வாரங்களும் கிணறு குளம் கேணி மு

17. சித்திவளாக வழிபாட்டு விதி - 1873

17. சித்திவளாக வழிபாட்டு விதி 1873 சுவாமிகள் ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதத்தில் உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து, "இதைத் தடைபடாது ஆராதியுங்கள். இந்தக் கதவைச் சாத்தி விடப் போகிறேன். இனி கொஞ்சகாலம் எல்லோரும் - ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகிறபடியால் - உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல், 'நினைந்து நினைந்து' என்னும் தொடக்கமுடைய - 28 பாசுர மடங்கிய - பாடலிற் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்திற் செய்யுங்கள். நானிப்போது இந்த உடம்பி லிருக்கின்றேன். இனி எல்லா உட

3. கிளைச் சாலைகள் (1867)

3. கிளைச் சாலைகள் (1867) சமரச வேத தருமச்சாலையைச் சார்ந்த வைத்தியசாலை, சாஸ்திர சாலை, உபகாரச்சாலை,

13. சன்மார்க்கப் பிரார்த்தனை 12 - 5 - 1872

13. சன்மார்க்கப் பிரார்த்தனை 12 - 5 - 1872 உ ஸ்ரீ பார்வதிபுரம் என்னும் உத்தரஞானசிதம்பரத் திருப்பதிக் கண்ணே அகிலாதாரமாய் விளங்கும் ஸ்ரீ சமரச வேத சன்மார்க்க சங்கத்துப் பெருந்தலைப் பதியாக வீற்றிருந்தருளும் அருட்பெருஞ் சோதியராகிய எமது ஆண்டவனார் திருச்சந்நிதிக்கு யானெனும் போத நாச வந்தனஞ் செய்த விண்ணப்பம்.எம்மிறையவரே! இது பரியந்தம் யானாகத் தேடியதோர் பொரு ளென்ப தில்லையாகவே, தேவரீர் பெருங்கருணையால் என்னை உய்யக்கொள்ள உபகரித்தருளிய உடல் பொருளாவி என்னும் மூன்றையும் அறியாமையா

12. சாலையி லுள்ளார்க்கு இட்ட ஒழுக்கக் கட்டளை 9 - 3 - 1872

உ சிவமயம் அப்பாசாமி செட்டியா ரவர்களுக்கு, இந்த சாலையால் எனக்கு மிகவும் சலிப்புண்டாகிறது. அந்த சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் சாலையி லிருக்கிறவர்க ளெல்லாம் சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்கவேண்டும். என்மேற் பழியில்லை. சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப் படவேண்டும். பிரஜோத்பத்தி வருடம்

10. சமரச வேத பாடசாலை (11 - 1 - 1872)

உ திருச்சிற்றம்பலம் இஃது சமரச வேத பாடசாலை இதில் வாசிக்க விரும்புகின்றவர்கள் பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களாகி, நல்லறிவு, கடவுள் பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களையும் உண்மையுரைத்தல் இன்சொல்லாடல் உயிர்க் குபகரித்தல் முதலிய நற்செய்கை ஒழுக்கங்களையும் பெற்று சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களாகியிருத்தல் வேண்டும். இதில் வாசிக்கின்றவர்களுக்கு சிலகாலம் வாசித்து ஒருவாறு வாசிப்பிற் பய

14. சபை வழிபாட்டு விதி 18 - 7 - 1872

14. சபை வழிபாட்டு விதி 18 - 7 - 1872 உ திருச்சிற்றம்பலம் ஞானசபை விளக்க விபவ பத்திரிகை அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம். இன்று தொடங்கி சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை யென்றும், சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை யென்றும், சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்க மென்றும் திருப்பெயர் வழங்குதல்வேண்டும்